கல்வாரி சிலுவையிலே
ஜீவனைக் கொடுத்தீரே – 1
என் ஜீவனுள்ள நாளெல்லாம்
துதித்தாலும் போதாதே – 2 உம்மை
துதித்தாலும் போதாதே
1. என் பாவம் போக்கிடவே
தம் ரத்தம் சிந்தினீரே – 2
என் சாபம் நீக்கிடவே
தம் ஜீவன் ஈந்தீரே – 2
2. என் காயம் ஆற்றிடவே
நீர் காயமடைந்தீரே – 2
என் நோய்கள் தீர்த்திடவே
நீர் தழும்பை ஏற்றீரே – 2
3. சமாதானத்தை தந்திட
ஆக்கினை ஏற்றுக்கொண்டீர் – 2
ஆடுகள் போல் திரிந்த – என்
அக்கிரமத்தை நீர் சுமந்தீர் – 2
Online Christian SongBook: கல்வாரி சிலுவையிலே