அரசனைக் காணமலிருப்போமோ? – நமது ஆயுளை வீணாகக் கழிப்போமோ? பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? – யூதர் பாடனு பவங்களை ஒழிப்போமோ? – யூத 1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, – இஸ்ரேல் ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே, ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம் தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே! – யூத — அரசனை 2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார்! – மேற்குத் திசை வழி காட்டிமுன் செல்லுது பார்! பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே -அவர் பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே! – யூத — அரசனை 3. அலங்காரமனை யொன்று தோணுது பார்! – அதன் அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்! இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்! – நாம் எடுத்த கருமம் சித்தியாகிடும் பார்! – யூத — அரசனை 4. அரமனையில் அவரைக் காணோமே! – அதை அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே! மறைந்த உடு அதோ! பார் திரும்பினதே, – பெத்லேம் வாசலில் நமைக் கொண்டு சேர்க்குது பார்! – யூத — அரசனை 5. பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே, – ராயர் பொற்கழல் அர்ச்சனை புரிவோமே! வன்கண்ணன் ஏரோதைப் பாராமல், – தேவ வாக்கினால் திரும்பினோம் சோராமல், – யூத — அரசனை